Monday, 21 November 2011

malaiyil theekulikiren..

அவளது அண்ணனின் தொலை பேசிற்கு அழைத்தாள்..அதே சிறுபிள்ளை குறும்போடு சண்டை போட்டுகொண்டிருந்தாள்,நான் அவளறியாமல் வழக்கம் போல் அங்கும் இங்கும் தூளி ஆடும் அவளின் இருவிழிகளையும் ரசித்து கொண்டிருந்தேன்.இன்று நினைத்தாலும் எல்லாம் மாயமாய் இருக்கிறது எப்படி நானும் அவளும் வாழ்வில் இணைந்தோம் என்று. அவள் எனது வகுப்பில் முதன்முதலாய் நுழைந்தது முதல்..
     
    அவள் செய்யும் குட்டி  சேட்டைகள்,சிறு குறும்புகள்  செய்து தோழிகளிடம் மாட்டிகொண்டு அவள் கொடுக்கும்  விளக்கங்கள் எல்லாம் என்னை அவளருகில் இருக்கும் ஆசையை தந்தது...

 நான் கடவுளுக்கு எத்தனை முறை நன்றி கூறியிருப்பேன் என்று எனக்கே தெரியாது அவள் ஒவ்வொரு தேர்வுக்கும் எனக்கு பின்னல் அமர்வதை நினைத்து.. நானும் எல்லாரையும் போல் தேர்விற்கு படிக்காமல் பக்கத்தில் அமர்ந்திருபவரின் விடைத்தாளை நம்பி வந்தேன்.எனது அதிர்ஷ்டமோ இல்லை அவளின் துரதிர்ஷ்டமோ என் முன்னால் அமர்பவன் விடுமுறையில் இருந்தான் .நானும் அவள்  விருப்பமின்றி அவளது விடைத்தாளை பறித்து விடை எழுதிகொண்டிருந்தேன்..அந்நேரம் பார்த்து எனது ஆசிரியரிடம் நான் மாட்டிகொண்டேன் பாவம் அவளும் என்னால் அன்று தண்டனை அனுபவித்தால் அனைவரின் முன்னிலையில் அவள் விட்ட  கண்ணீரை இன்றும் என்னால் மறக்கமுடியவில்லை ..மழை துளியாய் சிந்திய அவளது கண்ணீரில் முதன் முதலை நான் தீக்குளிப்பதாய்   உணர்ந்தேன்  ....அன்று தான் ஏனோ அவளிடம் ஒரு மனம் புரியாத அன்பு தோன்றியது ..அடுத்து வந்த தேர்வில் நான் படிக்காமல் சென்றாலும் அவளிடம் விடைத்தாளை வாங்குவதை தவிர்த்தேன் பின்பு அவளுக்காக படிக்க ஆரம்பித்தேன்.. அன்று முடிவு செய்தேன் அவள் கண்களில் கண்ணீர் துளிக்கு விடுமுறை அளிக்க..அவளை கரம் பிடிக்க..

        ஆனால் இன்றும் என்னால் அவளது கண்ணீருக்கு விடுமுறை தர இயலவில்லை..அவளோடு நான்  வாழ்வது அவளது பிரியமான சொந்தங்களுக்கு ஏனோ  பிடிக்கவில்லை..காரணம் நானும் அவளும் காதல் திருமணம் செய்ததுதான்.. அதனால் சிறுபிள்ளை போல் மனமிற்கும் என்னவளை வார்த்தைகளால் துரத்தி மகிழ்வதே அவர்களது வாடிக்கை..

       தூளி ஆடிகொண்டிருந்த இருவிழிகளில்  கண்ணீர் துளி ஒட்டிகொல்வதும் ,நான் பார்க்கும் முன்பே அதை துரத்த  அவள் படும்பாடு .....

     மழைத்துளியாய் அவள் எனதருகில் இருந்தாலும் அவ்வபோது இன்றும் தீக்குளிக்கிறேன்..என்னவளின் சொந்தங்கள் நான் புரிந்த காதலுக்காக  அவளை காயபடுத்தும் பொழுது ...

2 comments:

kabilan said...

ezhuthu pizhai illam erunthirunthaal nanraaga erunthu erukkum...

Anonymous said...

migavum nanraaga ullathu.. :)