Wednesday, 14 March 2012

veetirku sellum ovoru muraiyum..

பெரியம்மா பாசமாய் பாயாசம்..
சித்தி எனக்கு பிடிக்கும் என பூரி ..
அம்மா பருப்பு சாதம்..
அண்ணா இனிப்புகள்..
அப்பா பழங்கள் ..
பாட்டி பலகாரங்கள் ..
ஆனால் எனக்கோ என் வீட்டின் அறையில் துக்கம் இல்லா குட்டி தூக்கம் ..
வீட்டிற்கு  செல்லும்  ஒவ்வொரு  முறையும் ..

Friday, 10 February 2012

கடற்கரையில் ஓர் பட்டம்

பட்டத்தை பிடித்து நீ துள்ளி ஓடுகையில் ..

உன் காலடி சின்னத்தோடு என் காலடியும் உறவாடும்..

உன் திசையில் என் பார்வையும்   கைகோர்க்கும் ...

வான் நோக்கிய உன் விழிகள் அறியாத   
உன்னைப்பற்றியே  கதைக்கும்  எனது கண் இமைகள் ...

அனைத்தும் காற்றில் இடறி விழும் பட்டத்தை ஏந்த அல்ல
உன்னை ஏந்த மட்டும் ...

Saturday, 21 January 2012

நான் ஒன்றும் சிவனோ விஷ்ணுவோ இல்லையே ..


வீதியில் இருப்போர்க்கு
அவர்கள்  எதிரே நான்
தோன்றினாள் அதிர்ஷ்டம்...
வாழ்த்தினாள் தெய்வ  வாக்கு...

 தல்லாடித்திரியும்  தடியர்களுக்கு
  ஓர் விளையாட்டு கை பொம்மையாய் ..
  ஓர்  நகைப்பு பொருளாய் ..  

 பெற்றவர்க்கு
  ஓர் துயரமான துக்கமாய் ..
  
என்னை ஓர் தோழியாய் அல்ல
ஓர் தோழனாய் அல்ல
அவர்கள் வீட்டில் இருக்கும் ஓர்  நாய் குட்டியாய்...
எண்ண ஓர் ஜீவன் இல்லா உலகத்தில்

என்னை அர்த்தநாரியாய் / மோக்கினியாய் பூஜிக்க
நான் ஒன்றும் சிவனோ விஷ்ணுவோ இல்லையே ..

 ஓர் அற்பமான  திருநங்கை தானே ...