Monday, 19 December 2011

அன்னையும் தோழி ஆவாள்..
என்னுடன் தொலைக்காட்சி remoter ku சண்டை இடுகையில் ...

Tuesday, 13 December 2011

nilavum



நிலவும் நதியில் விழுந்து கல் அடி வாங்கும் ...
அதுவும் தனிமையில் இருந்தால் ..

பிடித்தது ...

தனிமை உணராத பொழுது ,
பிரிவு இல்லா  நட்பு ,
வெறுமை வராத உழைப்பு ,
மொழி அறியா புன்னகை ,
காயம் இல்லா ஊடல் ,
மௌனம் இடையூராத  பேச்சு ,
இமை திறக்காத கனவு ,
விழி மறைக்காத காட்சி ,
நகக் கடி இல்லா பந்தயம் ..
கண்ணீர் அறியா கவலை..
தலைகனம் எட்டாத பாராட்டு..
வன் சொல் உதிர்க்காத இதழ் ..
எறும்பு உண்ணாத வெல்ல பாகை  ...
இடி கொட்டாத வானம் ..
 
 

Wednesday, 7 December 2011

அனைக்க அன்னை இருந்தும் அரவணைக்க தந்தை இருந்தும் அனாதையாக உணர்ந்த தளிர் மனதின் கண்ணீர்கள் ....



  தலை கனத்து விட  கூடாதென்று என் நிறைகளை நெஞ்சில் தக்கவைத்து குறைகளை உரைத்த என் தந்தைக்கு
  என்னுள்  தலை கனத்துடன் தன்னம்பிக்கையும் கரைந்து போனதை அறிய இயலவில்லை ...

     வெளிச்சம் அதிகம் கிடைத்தால் எங்கே நான் அல்லி பூவை போல் வாடிருவேன் என்று தன் அன்பு ஒளியை என்னிடம் காட்ட மறுத்த அன்னைக்கு
    நான் அல்லி பூ அல்ல அவள் ஒளியை ஏங்கி வாழ நினைக்கும் சூர்யகாந்தி பூ என்று அறிய இயலவில்லை ...


Tuesday, 6 December 2011

புரிஞ்சுக்கவே முடியல ...

கவிதைகளால் அந்த கள் அழகரை கவர்ந்து காதல் வைத்து கணவராக்கிய ஆண்டாள் ...
மீன் விழியால் சொக்கனை சொக்கவைத்து சொந்தமாக்கிய மீனாக்ஷி ...
இவர்கள் எல்லாம் அவள் வீட்டின் பூஜை அறையில்
ஆனால் மணம் முடிக்க மணவாளனை தனிச்சையாக தேர்ந்தெடுத்த அவளோ அவள் வீட்டு வாசலில் ....


Monday, 5 December 2011

என்னவள்

என் முற்று புள்ளியின் அருகில்
ஓர் ஒற்றை புள்ளியாய்  ..

என் வானில் மிதந்து மறையும் மேகங்களின்  நடுவே
மறையாமல்  நிலையாய் இருக்கும் ஓர் நிலாவாய்..

தனிமையின் தண்டனையில் இருந்து
என்னை மீட்டவள் ..