Wednesday, 7 December 2011

அனைக்க அன்னை இருந்தும் அரவணைக்க தந்தை இருந்தும் அனாதையாக உணர்ந்த தளிர் மனதின் கண்ணீர்கள் ....



  தலை கனத்து விட  கூடாதென்று என் நிறைகளை நெஞ்சில் தக்கவைத்து குறைகளை உரைத்த என் தந்தைக்கு
  என்னுள்  தலை கனத்துடன் தன்னம்பிக்கையும் கரைந்து போனதை அறிய இயலவில்லை ...

     வெளிச்சம் அதிகம் கிடைத்தால் எங்கே நான் அல்லி பூவை போல் வாடிருவேன் என்று தன் அன்பு ஒளியை என்னிடம் காட்ட மறுத்த அன்னைக்கு
    நான் அல்லி பூ அல்ல அவள் ஒளியை ஏங்கி வாழ நினைக்கும் சூர்யகாந்தி பூ என்று அறிய இயலவில்லை ...


No comments: