வீதியில் இருப்போர்க்கு
அவர்கள் எதிரே நான்
தோன்றினாள் அதிர்ஷ்டம்...
வாழ்த்தினாள் தெய்வ வாக்கு...
தல்லாடித்திரியும் தடியர்களுக்கு
ஓர் விளையாட்டு கை பொம்மையாய் ..
ஓர் நகைப்பு பொருளாய் ..
பெற்றவர்க்கு
ஓர் துயரமான துக்கமாய் ..
என்னை ஓர் தோழியாய் அல்ல
ஓர் தோழனாய் அல்ல
அவர்கள் வீட்டில் இருக்கும் ஓர் நாய் குட்டியாய்...
எண்ண ஓர் ஜீவன் இல்லா உலகத்தில்
என்னை அர்த்தநாரியாய் / மோக்கினியாய் பூஜிக்க
நான் ஒன்றும் சிவனோ விஷ்ணுவோ இல்லையே ..
ஓர் அற்பமான திருநங்கை தானே ...
No comments:
Post a Comment